| |
முந்திய 1970 இல் இருந்து தாய், சேய் சுகாதார சேவை வழங்கலானது முழு சுகாதார சேவையில் மிகவும் முக்கிய பங்கை வகித்துக்கொண்டு வருகின்றது. இதுவானது சுகாதார உட்கட்டமைப்பினை இன்னும் வலுவடையச் செய்து மிகவும் திறமையானதும் குடும்பச் சுகாதார சேவைகளை நாடு பூராகவும் வழங்குவதற்கும் உதவியுள்ளது.
சுகாதாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய அம்சங்களில் ஒன்று. குடும்பச் சுகாதார சுகாதாரமானது தேசிய மற்றும் மாகாண சுகாதார அமைப்பினூடாக ஒருங்கிணைத்துக் கொடுக்கப்படுகின்றது.
தேசிய அளவில் குடும்பச் சுகாதார பணிப்பகமானது திட்டமிடல், ஒருங்கிணைத்தல், மேற்பார்வை செய்தல் மற்றும் தாய், சேய் சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு நிகழ்ச்சிகளை பரிசிலணை செய்தல் போன்றவற்றினூடாக முழு நாட்டுக்கும் வழங்குவதில் மத்திய பங்கினை வகிக்கின்றது.
மாகாண மட்டத்தில், மாகாண சுகாதார சேவைகள் அதிகாரி (PDHS) சுகாதார அதிகாரி ஆவார். இவருக்கு உதவும் வகையில் பிராந்திய சுகாதார சேவைகள் அதிகாரிகள் அவர்களுக்குரிய பிராந்தியங்களுக்கு (மாவட்டங்களுக்கு) பொறுப்பதிகாரிகளாக இருப்பார்கள். பிராந்திய சுகாதார சேவைகள அதிகாரி ஆனவர் தொழிநுட்ப அதிகாரிகளுக்கும் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் பொறுப்பானவராக இருப்பார். தை்திய அதிகாரி/தாய் - சேய் சுகாதாரம், பிராந்திய Epidemiologist (RE), மேற்பார்வை செய்யும் பொதுச் சுகாதார பரிசோதகர், பிரதேச ((SPHID), பிராந்திய மேற்பார்வை செய்யும் பொதுச் சுகாதார தாதி, சுகாதார கல்வி அதிகாரிகள் 1- 3 (HEO), பிராந்திய பல் வைத்தியர்கள் புள்ளிவிபர ஆய்வு (Statistical Survey) அதிகாரிகள் (SSO), மற்றும் நிகழ்ச்சிசகள் திட்டமிடல் அதிகாரிகள் ஆகியோர் தொழிநுட்ப குழாமில் அடங்குவார். வைத்திய அதிகாரி / தாய், சேய் சுகாதாரம் ஆனவர் தாய் சேய் சுகாதார சேவைகள் அவர்களுக்குரிய பிராந்தியத்தில் (மாவட்டத்தில்) திட்டமிடல் மற்றும் மேற்பார்வை செய்பவராக இருப்பார்.
இச் சேவைகள் அப்பிராந்தியத்தில் வைத்திய ஸ்தாபனங்கள் மற்றும் சுகாதார அலகுகளின் வலையமைப்பினூடாக வழங்கப்படுகின்றது. ஒரு மாவட்டத்தில் (பிராந்தியத்தில்) 07 முதல் 20 வரையிலான வைத்திய சுகாதார அதிகாரிகளுக்குரிய பிராந்தியங்கள் உள்ளடங்கும். இதுவே அப்பிராந்தியத்தில் மிகச் சிறிய சுகாதார அலகு ஆகும். மற்றும் இதற்கு சுகாதார வைத்திய அதிகாரி பொறுப்புதாரியாவார்.
சுகாதார வைத்திய அதிகாரிக்கு உதவுவதற்காக பொதுச் சுகாதார நபர்கள் உள்ளனர். பொதுச்சுகாதார தாதியர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மேற்பார்வை செய்யும் பொதுச்சுகாதார மருத்துவிச்சிகள் (midwive) மற்றும் பொதுச் சுகாதார மருத்துவிச்சிகள் (midwives) ஆகியோர் இந்த பொதுச் சுகாதார குழாமில் உள்ளனர்.
பொதுச் சுகாதார மருத்துவிச்சிகள் (midwives) ஒரு சமூகத்தில் தாய், சேய் ஆகியோருக்கு வீடு வீடாகச் சென்று சுகாதார சேவைகளை வழங்குவதில் “முன்னிலை” சேவை வழங்குபவராக உள்ளார். பொதுச் சுகாதார மருத்துவிச்சிகள் (midwives) இன் சேவைக்கு நன்கு எல்லை வரையறுக்கப்பட்டதும், மக்கள் தொகை 2000 முதல் 5000 வரை கொண்டதுமான பிராந்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. முறையான வீட்டுத் தரிசனம் மூலம் அவர், கற்பிணித்தாய்மார், Newborns, infants, மற்றும் பாடசாலைகளுக்கு செல்ல இருக்கும் பிள்ளைகளுக்கு சேவைகளை வழங்குவதோடு, அவருக்குரித்தான எல்லையில் தகுதியானவர்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டுச் சேவைகளையும் வழங்குகிறார். அவர் சுகாதாரம் மற்றும் சுகாதாரம் சம்பந்தமான நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் மற்றும் ஆலோசனைகளையும் வழங்குவதோடு முக்கியமான குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான புத்திமதிகளையும் தகுதியான நபர்களுக்கு வழங்குகிறார். அத்தோடு அவர் அவரின் எல்லைக்குட்பட்டோருக்கு குடும்பக் கட்டுப்பாட்டு உதிரிகளை (மாத்திரைகள், ஆணுறைகள்) வழங்குவதோடு, அவர்களை தொடர்ந்து முறையாக பின்தொடர்ந்து வருகிறார்.
அத்தோடு அவர் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களை பெண்ணியல் நல சிகிச்சை நிலையத்துக்கு தரிசிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதோடு அவர்களை பின்தொடர்வதன் மூலம் அவர்கள் அச்சிகிச்சை நிலையத்துக்கு ஒழுங்காக வருகை தருகிறார்களர என்பதை உறுதிப்படுத்தவும் செய்வார். அவரது வீடு வீடாகச் சென்று வழங்கும் சேவைகளுக்கு மேலதிகமாக அவர் சமூகத்தை சுகாதார சேவைகள் செயற்றிட்டத்துடன் ஒருங்கிணைத்தல் முயற்சியிலும் பங்கெடுப்பார். இந்த செயற்றிட்டத்தினூடாக நன்றாக அபிவிருத்தியடைந்ததும் பயனுள்ளதுமான, தடுக்கப்படவேண்டியதும், முன்னெடுக்கப்படவேண்டியதுமான தாய் - சேய் நல மருத்துவத்தை பொதுமக்களுக்கு வழங்கிவருகின்றது. மற்றும் இச்செயற்றிட்டமானது மற்றைய அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு பின்பற்றக்கூடிய ஓர் உதாரமாக உள்ளது. |